Wednesday

சிங்கம்ம்ம்ம்ம்ம்.....

இந்த ஆள் என்னுடைய ஆதர்சம்...இவரைப் போல எழுதிட வேண்டுமென பல காலமாக நினைத்து கொண்டிருக்கிறேன், எழுதினேனா என்பது வேறு விஷய்ம். எழுபது வருடங்களுக்கு மேலாக பத்திரிக்கை துறையில் தீவிரமாய் இயங்கிவருபவர். இப்போது வயதின் காரணமாய் உடல் தளர்ந்திருந்தாலும் இளமை நிரம்பி வழியும் எழுத்தாளர்.

அவரின் எழுத்துக்களில் திமிறும் இளமையும்,ததும்பும் நகைச்சுவையும் வாசித்தால் மட்டுமே அனுபவிக்க முடியும்....வார்த்தைகளால் இங்கே சொல்லிவிட முடியாது.அரசியல் கட்டுரகளில் இவரால் பந்தாடப் படாத அரசியல்வாதிகள் சொற்பமே...கொஞ்சமும் தன்னை சமரசம் செய்து கொள்ளாத எழுத்தாளன் இவர்.

தொண்ணூற்று ஆறு வயதில் தனது கடைசி நாவல் என்று சொல்லி தற்போது ஒரு புதினத்தை வெளியிட இருக்கிறார்(The Sunset club).சமீபத்தில் அவரின் பேட்டி ஒன்றினை பார்க்க நேர்ந்தது.தேடிப் பிடித்து அதன் இனைப்பை இங்கே தந்திருக்கிறேன்.பார்த்து விட்டு சொல்லுங்கள்...இந்த எழுத்து சிங்கத்தின் வீச்சினை...

இத்தனை சொல்லும் போதே தெரிந்திருக்க வேண்டும்...அவர் யாரென, தெரியாதவர்களுக்கு அவர் திரு.குஷ்வந்த் சிங்.

Thursday

உள்ளேன்...உள்ளேன்...உள்ளேன்!

பதிவு எழுதலைன்னா என்ன?....அதான் இப்ப டெம்ப்ளேட் மாத்தியாச்சில்ல...!


:)

Saturday

ஆயுத பூசை!






கும்புட்டுக்கங்க! இனியாவது எனக்கு நல்ல புத்தி வரணும்னு!

Sunday

சத்திய(மா) சோதனை பதிவு

கதறக் கதற, பிழியப் பிழிய,துள்ளத் துடிக்க நீள நீளமாய் பதிவுகள் எழுத வேண்டுமென ஆசையெல்லாம் படுகிறேன், மேட்டரெல்லாம் கூட நெறய இருக்கு....ஆனால் நீண்ட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் திருவாளர் சோம்பேறித்தனத்துடன் அருமையான கூட்டணி அமைத்திருப்பதால் அந்த மாதிரியான பதிவுகளை வாசிக்கும் பாக்கியம் உங்களுக்கு கிடைக்காமல் போகிறது.

என்ன சொல்ல, நீங்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்....

அயோத்தி தீர்ப்புல எனக்கு உடன்பாடில்லை,அந்த நாள் குத்து வெட்டு இல்லாமல் அமைதியா போனதில் ரொம்பவே சந்தோஷம்.சகிப்புத் தன்மையில் நாம் வளர்கிறோமா என்ன!.

எந்திரன் ரிலீஸ் செய்த ஒரே பதிவர் என்கிற பெருமையை நான் தட்டிச் சென்று விட்டதாக நாளைய சரித்திரம் கூறும்.எனக்கு அதிலெல்லாம் பெரிதாய் ஆர்வமில்லை, போட்ட காசு வந்தால் போதுமென்ற மனநிலையே மேலோங்கியிருக்கிறது. நிச்சயமாக எந்திரன் விமர்சனம் எழுத மாட்டேன் என்ற உறுதியை இங்கே தந்து விடுகிறேன். பிழைத்துப் போங்கள்...

”The Immortals of Meluha” பற்றி எழுதுவதாக ஏற்கனவே கூறியிருந்தேன். இன்னமும் முடிக்கவில்லை, ஆனால் வாசித்தவரையில் சுவாரசியமாய் இருக்கிறது. மிகப் பெரிய பிம்பமான சிவனை, ஒரு சாமானிய இளைஞனாய் கற்பனை செய்வதும், அவரின் எண்ண் ஓட்டத்தில் கூடவே பயணிப்பதும் சுவாரசியமாய் இருக்கிறது.விரிவாய் எழுதிட வேண்டிய விமர்சனம் அது, இதை ஒரு ட்ரெயிலராக வைத்துக் கொள்ளலாம்...சினிமாக்காரன் புத்தி!

மகாத்மாக்கள் ஒரு நூற்றாண்டுக்கு ஒருத்தர்தான் பிறப்பாஙக்ளாம். அந்த கணக்குல பார்த்தா 1969ல பிற்ந்த மஹாத்மாவை மக்கள் எப்ப தெரிஞ்சுக்குவாங்கன்னு தெரியலையே!...ம்ம்ம்ம், விதி வலியது!


Thursday

சந்திரபோஸ் போய்ட்டாராமாம் !

இளையராஜா என்கிற பெரு வெளிச்சத்தின் முன்னால் துக்குணூண்டு மின்மினிகளாய் வெளிச்சம் காட்டிய இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்திரபோஸ் காலம் ஆகிவிட்டார். AVM நிறுவனத்தின் ஆஸ்தான இசையமைப்பாளரோ என்று நினைக்கிற வகையில் இவருக்கும்,AVM நிறுவனத்துக்குமான தொடர்பு இருந்தது. தொலைக்காட்சி தொடர் எடுக்க வந்த போது கூட இவரைத்தான் அவர்கள் பயன் படுத்தினர்.

மூன்று ரஜினி படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் என்பது கொஞ்சம் ஆச்சர்யமான செய்திதான்...இசையமைப்பாளர் சந்திரபோசை நான் ரசித்ததாக இப்போது கூறினால் அது அப்பட்டமான பொய்யாகவே இருக்கும். ஆனால் அவர் பாடிய ஒரே ஒரு பாட்டுக்கு நான் அநியாய ரசிகன்....ம்ம்ம்ம், ஏண்டி முத்தம்மாவைத்தான் சொல்கிறேன்.

தூங்கி வழியும் நீர்நிலை, படகு,தனிமை, நீங்கள் இவையெல்லாம் சேரும்போது, இந்த பாடலை கேட்டுப் பாருங்கள்...அந்த சூழல் தரும் உணர்வுதான் சொர்கம். சந்திரபோஸ் இழைந்திருப்பார் இந்த பாடலில், ப்கிர்ந்து கொள்ளலாமென இனையத்தில் தேடினால், அவரே ரிமிக்ஸ் செய்ததாக ஒரு ஒளித் துணுக்கு கிடைத்தது....முள்ளைத் தாண்டி ரோஜாவை ரசிப்பதைப் போல, இந்த பாடலை கேட்டுப் பாருங்கள்.


ராமர் மசூதி!

தீர்ப்பு ஒரு வாரம் தள்ளிப் போயிருக்கிறது....

நான் இந்துவாய் பிறந்திருப்பதால், அந்த இடத்தை மசூதிக்கு கொடுக்கவே விரும்புகிறேன். ஒரு வேளை முஸ்லீமாய் பிறந்திருந்தால் கோவிலுக்கு விட்டுக் கொடுத்திருப்பேனோ என்னவோ!

எனது நம்பிக்கைகள் மட்டுமே என்னை மகிழ்ச்சியில் வைத்திருக்கின்றன!

கடவுள்கள் பாவம்தான்!

Saturday

பிள்ளையாரும், பிள்ளை யானும்....!

நினைவு தெரிந்த காலங்களில், சுமாராக பரிட்சை எழுதி இருந்தால் கூடுதல் மார்க் போடுபவராகவும், எதுவுமே எழுதாவிட்டால் பாஸாக்கிவிடுகிற ஆபத்பாந்தவனாகவே அறிமுகமாகி இருந்தார். ஆனால் வளர வளர என்னளவில் அந்த நம்பிக்கையை சுக்குநூறாக்கிய பெருமை அவருக்கு உண்டு.

வயசுக்கு வந்த பின்னர், கோரிக்கைகள் மாறியிருந்தன. சில, பலரின் கடைக்கண் பார்வைகளுக்கு அவரிடம் மனுப் போட்டேன். காக்காய் உட்கார்ந்ததா அல்லது பனம் பழம் தானாய் விழுந்ததா என்பது தெரியாது.சில, பல நிகழ்வுகளும், சந்தோஷங்களும், அதன் தொடர்ச்சியான சோகங்களையும் நடந்தேறியது.இப்படியான அனுபவங்களினால் வெறுத்துப் போய் ஒரு கட்டத்தில் என்னை நாத்திகனாய் மாற்றியதில் ஆனைமுகத்தானுக்கு குறிப்பிடத் தக்க பங்கு இருந்தது.

எங்கள் கல்லூரியின் பின்னால் ”மயில்காடு” என்று ஒரு காடு இருந்தது. இப்போது அந்த காடு இல்லை,அழித்து விட்டார்கள். அந்த காட்டின் நடுவில் ஒரு பெரிய மேடையின் நடுவே ஒற்றை ஆளாய் ஒரு பிள்ளையார் இருந்தார். அவருக்கு பூசைகள் எல்லாம் கிடையாது, ஏனெனில் அந்த வனாந்திர பகுதியில் ஆட்கள் நடமாடாத காலம் அது...அந்த காடு தந்த தனிமையும், அமைதியும் எங்கள் குழுவிற்கு பிடித்திருந்ததால் கல்லூரி நாட்களில் ஆறாவது நண்பராகவே இருந்தார் பிள்ளையார்.கல்லூரி நாட்களுக்குப் பின்னால் தொழிலில் காலடி எடுத்து வைத்ததும் ஒரு பிள்ளையார் சதுர்த்தி அன்றுதான், அந்தக் கணக்கில் பார்த்தால் இன்றோடு பதினெட்டு வருட சர்வீஸ் ஆகிவிட்டது.

பிள்ளையார் குறித்து எனக்கு பல விமர்சனங்கள் உண்டு...ஆனாலும் பரஸ்பர சகிப்புத் தன்மையினால் இன்று வரை பிரியாமல் கூடவே இருக்கிறோம். கடவுள் என்பதற்கும் மேலே கூட்டாளி மாதிரியான ஒரு உறவு எங்களுக்குள்...இன்றைக்கு அவருக்கு பிறந்த நாள்!

ஹேப்பி பர்த்டே பாஸ்!

Wednesday

”பீப்லி” (லைவ்), இது விமர்சனமில்லை!

நேற்றைக்கு பீப்லி (லைவ்), என்கிற ஹிந்திப் படம் பார்க்க நேர்ந்தது, ஆச்சர்யமாய் முழு படமும் பார்க்கும் பொறுமை நேற்று என்னிடம் இருந்தது. இதை இயக்குனரின் வெற்றியாகவே கருதுகிறேன். ஏனெனில், நான் முழுசாய் உட்கார்ந்து பார்த்த கடைசி படம் “பூ”, புதிதாய் வருகிற எல்லா தமிழ்ப் படங்களையும் முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் வாய்ப்பும், வசதியும் இருந்தும் பத்திருபது நிமிடங்களுக்கு மேல் அவைகளாஇ சகித்துக் கொள்ளும் பொறுமை எனக்கு இருந்ததில்லை.

பயந்து விடாதீர்கள்!, படத்தின் விமர்சனம் எல்லாம் இங்கே எழுதப் போவதில்லை, அதற்கென நிறைய ஆட்கள் இங்கே நிரம்பியிருக்கிறார்கள். நான் பகிர விரும்புவது இந்த படத்தின் தயாரிப்பு அம்சம்தான்.....பெரிதான கள அமைப்பில்லாது, ஒரு சிறிய ஓட்டு வீட்டின் முன்னாலே எந்த சலிப்புமில்லாது மொத்த கதையும் ஓடி முடிந்து விடுகிறது. பத்துக் கோடி தயாரிப்பு செலவு என்கிறார்கள், எனது அனுமானத்தில் அதில் பாதிக்கும் குறைவான தொகைக்கு மேல் செலவு ஆகியிருக்காது.

இந்த படத்தின் இன்னொரு ஆச்சர்யமான விஷயம்....இசை! , இந்த பாடல் ஒரு சாட்சி!


ஹிந்தி தெரிந்திருந்தால் மட்டுமே இந்த படத்தினை முழுமையாக ரசிக்க முடியும். பார்த்தே தீர வேண்டிய படம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன்,வாய்ப்பு கிடைத்தால் பார்த்து விடுங்கள்.

அமீஷ் திரிபாதி எழுதிய “The Immortals of Meluha” வாசித்துக் கொண்டிருக்கிறேன், கொஞ்சம் சுவாரசியமான புத்தகம். தனியே விரிவாய், விரைவில் எழுதுகிறேன்.

முரளிக்காக....



அப்பாவியாய், அழுத்திச் சொல்லத் தெரியாத அசட்டு இளைஞராகவே இறுதிவரை திரைமுகம் காட்டிய மனிதர். இனி நம்மோடு இல்லை....ம்ம்ம்ம்ம்

”முரளி”க்காக மட்டுமே போடப் பட்ட பதிவு இது!

Sunday

அதுனால இனிமேல..... !

United States Department of Agriculture Nutritional Data for Milk and Beer

MILK (I cup, 2% milk)
BEER (I cup)
Fat (g)
5
0
Fiber (g)
0
.5
Sodium (mg)
122
12
Cholesterol (mg)
20
0
Calories
122
97
Calories from fat (%)
37
0
http://www.milksucks.com

Saturday

ஞான முத்ரா!

Monday

நந்தா என் நிலா!...நந்தா நீ என்ன்ன்ன்ன்ன் நிலா....!



சில பல நாட்களாய் தேடிக் கொண்டிருந்த பாடல், கொஞ்சம் முன்னால் சிக்கியது.

என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் அதை அப்படியே வைத்துவிட்டு, மூணு நிமிடமும் பதினைந்து நொடிகளும் ஒதுக்கி இந்த பாட்டை ஒரு தடவை கேட்டுவிடுங்கள். நான் திரும்ப திரும்ப ஓடவிட்டுக் கொண்டே இந்த பதிவை தட்டிக் கொண்டிருக்கிறேன்.

0.26 முதல் 0.58 வரையில் திரும்ப தனியே கேட்டுப் பாருங்கள், தமிழ் எனக்கு தாய் மொழியாக வாய்த்ததை நினைத்து செம்மாந்து போகும் தருணங்கள் அவை....பாலசுப்பிரமணியத்தைத் தவிர வேறு யாராலும் இத்தனை உயிர்ப்புடன் பாடியிருக்க முடியுமா தெரியவில்லை....

நாள்பட்ட ஒயின் தரும் கிறக்கத்தையும் இந்த பாடல் தூக்கிச் சாப்பிடும்....

1977ல் வெளியான பாடல். தர்மாவதி ராகத்தினை அடிப்படையாகக் கொண்டது.தட்சினாமூர்த்தி என்கிற பழம்பெரும் இசையமைப்பாளரின் கைவண்ணம்.

Tuesday

சைக்கிள் கேப்ல...ட்ரக் ஓட்றதுன்னா, இதுதான்!

Thursday

தலைவர் கலைஞருக்கு நன்றி!

தமிழக அரசின் இலவச தொலைகாட்சிப் பெட்டி என் மாதிரியான எழைக்கும் கிடைத்து விட்டது என்பதை தலைவர் கலைஞர் அவர்களுக்கும், வலைபேசும் தமிழுலகத்திற்கும் இதயம் இனிக்க, கண்கள் பனிக்க தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு மட்டும் இந்த பெட்டி கிடைத்திடவில்லை நண்பர்களே!, எங்கள் பகுதியில் இருக்கு அத்தனை ஏழைகளுக்கும் கிடைத்திருக்கின்றது.

எங்கள் பகுதியின் ஏழ்மை எத்தகையது என்பதை இதை வாசிக்கும் நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். வீட்டுக்கு இரண்டு கார்கள் இருந்தாலும் பொருளாதார நெருக்கடியால் ஒருவர் ஒரு காரில் மட்டுமே பயணம் செய்யும் துர்பாக்கியசாலிகள். தமிழக அரசின் கடைக்கண் இந்த மாதிரியான சமூகத்தினர் மீதும் பதிந்திருப்பதை நினைக்கும் போது தமிழகத்தில் சமூகநீதி எந்த அளவுக்கு பேணப்படுகிறது என்பதை நினைத்து அனைவருமே பெருமைப் படவேண்டும்.

இத்தனை இருந்தும், விடுமுறைகளில் வரும் பேரன்கள் கொண்டுவரும் xbox இதில் இனைத்து விளையாடமுடியுமா என்பதே இப்போதைக்கு என் அம்மாவின் கவலையாயிருக்கிறது.இதையெல்லாம் ”எல்காட்”டின் அப்போதைய சேர்மனான உமாசங்கர் யோசித்திருப்பாரா தெரியவில்லை,அவர் மீதான நடவடிக்கைகளுக்கு இதையும் ஒரு காரணமாக நாளைக்கு தலைவர் தெரிவிக்க வாய்ப்பிருக்கிறது என்பதை இந்த இடத்தில் சுட்டிக் காட்டிட விரும்புகிறேன்.

அடுத்த தேர்தலுக்கு குட்டியாக வீட்டுக்கொரு ஃப்ரிட்ஜ் கொடுக்கலாம் என்பதும் என் தாயாரின் ஆலோசனை!, தலைவர் கலைஞர் இதையெல்லாம் சிந்தித்து அடுத்த இலவசத்தை அறிவிக்க எல்லாம் வல்ல ஜெயலலிதா நாச்சியார்(எத்தனை நாளைக்குத்தான் அம்மான்னே சொல்றது!) அருள் புரியட்டும்.

Tuesday

பெண்களுக்கானது.....!

பெண்கள் சொல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் தவிக்கும் பிரச்சினைக்கு ஆசனம் மற்றும் முத்திரைகளைக் கொண்டு தீர்வு சொல்லியிருக்கின்றனர். பயன் தரும் கட்டுரை....!

http://www.bukisa.com/articles/197606_yoga-for-menstrual-problems

Monday

மொட்டைமாடி தோட்டம்

ஏரும் இல்லாமல் சேரும் இல்லாமல் நீரை மட்டும் கொண்டு செய்யும் விவசாயமுறைதான் ஹைட்ரோபோனிக்ஸ் விவசாயம். ஓரளவுக்கு தகவல் சேகரித்தாயிற்று....அடுத்து பரிசோதனைகள்தான், விரைவில் படம் காட்டுகிறேன்!

காகித தொட்டி...

ஹைட்ரோபோனிக்ஸ் தொழில் நுட்பம் பற்றிய விவரங்களை சேகரித்துக் கொண்டிருக்கிறேன். அதையெல்லாம் சேகரித்து வைக்க வேண்டியிருக்கிறது.


How to Create Seed-Starting Pots From Newspapers -- powered by eHow.com

Sunday

கல கல ரஜினி !

எந்திரன் ஹிந்தி பாடல்கள் வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியதன் யூட்யூப் வீடியோ கீழே!, மனிதர் எத்தனை இயல்பாய் பேசுகிறார். தமிழக மேடைகளில் காட்டும் இறுக்கமோ, அழுத்தமோ சுத்தமாய் இல்லை.சூப்பர் ஸ்டார்கள் தங்கள் மண்ணில் இயல்பாய் இருப்பது கூட கடினம்தான் போல!


Friday

பக்கம் நிரப்புதல்.....

ராவணன் நேற்றைக்குத்தான் முழுமையாக பார்த்தேன்....நிச்சயமாக இது விமர்சன பதிவில்லை. விமர்சிக்க தகுதி வேண்டும். நூறு ரூபாய் கொடுத்துவிட்டால் மட்டுமே அந்த தகுதி வந்து விடுவதாக எல்லாரும் நினைத்துக் கொள்கிறோம். இதைத் தாண்டிய விஷய ஞானமும், விருப்பு வெறுப்புக்கு அப்பாற் பட்ட அணுகு முறையும் விமர்சகனுக்கு அவசியமாகிறது.

போஸ்ட்டர் ஒட்டுகிறவனும் சினிமாக்காரன்தான், என் மாதிரி திரையரங்கத்தானும் சினிமாக்காரன்தான். ஆனால் என்னை சினிமாக்காரன் என்று சொல்லிக் கொள்வதில் எப்போதும் உடன்பாடில்லை. நான் வியாபாரி மட்டுமே!.....ஓடுகிற குதிரையில் மட்டுமே காசு போட நினைக்கிற வியாபாரி. நாற்பதாண்டுகளாய் இதையே செய்து கொண்டிருக்கும் குடும்பத்தின் இரண்டாம் தலைமுறை ஆள்....சுயபுராணம்!

ஒரு வர்த்தகனின் பார்வையில் ராவணன் தமிழுக்கான படமில்லை .நேரடி ஹிந்திப் படமாக செய்திருந்தால் இன்னமும் அடர்த்தியாக செய்திருக்க வாய்ப்பிருக்கிற படம் இது. கலாச்சார சமரசங்கள் அன்னியத் தன்மையை நிறையவே அள்ளித் தெளித்து விட்டது.தமிழில் படம் செய்து தன் தமிழ் அடையாளத்தை நிறுவிக் கொள்ள வேண்டிய நிர்பந்தந்திற்கு மணிரத்னம் மற்றும் அவர் குழுவினரின் பெருமளவு உழைப்பு விழலுக்கு இறைத்த நீராய் போனது சோகம்தான்.

ராவணன் படத்தைக் காட்டிலும் இருவர் மிக நேர்த்தியான தயாரிப்பு என்பது என்னுடைய தனிக் கருத்து. மொழியும் கலாச்சாரமும் இருந்தும் கதை நாயகர்களாய் நடிக்க தமிழக கலைஞர்கள் தயங்கினார்கள் அல்லது தவிர்த்தார்கள் என்பது பதிவு செய்யப் படாத வரலாறு.மோகன்லால் பாத்திரத்திற்கு நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட நாயகர்களை அணுகியதும் அவர்கள் தயங்கியதால் கடைசியில் ஒரு மளையாளி தமிழர்களின் நாயகனாய் வலம் வந்தார்.

மோகன்லாலின் அன்னியத் தன்மை திரையரங்குகளை விட்டு படம் ஓட காரணமாய் போனது. ஆனால் காலத்தே நிற்கும் கலை படைப்பு இருவர். இசையும், ஒளிப்பதிவும் இந்த படத்தின் சிறப்புகளில் ஒன்று, Mood lighting என்கிற வித்தைக்கு இந்த் படத்தினை உதாரணம் காட்டலாம். குறைகள் இல்லாமலில்லை, அதை சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதுமில்லை.

Wednesday

இனி ட்விட்டரிலும்.....

பிரபல பதிவரான பின்னாடி இதெல்லாம் தேவையான தேவை!......அதான் ஒரு கணக்கு ஆரம்பிச்சாச்சு!

”மனவரிகளை தட்ட இன்னொரு முகவரி!”

முத்திரைகள்....பயன்களும், பலன்களும்....!



.உடல் நலம் பேண விரும்புவோர் அனைவரும் அறிந்திருக்க வேண்டியது இந்த முத்திரைகள். தமிழகத்தில் அத்தனை பிரபல்யமாகாத ஓர் கலை....இனையம் மேய்ந்த வேளையில் கிடைத்தது. பயன் படுத்திக் கொள்ளுங்கள்.

....

Tuesday

வாய்தா ராணி!

அஞ்சா (!)நெஞ்சன் அழகிரியின் மதுரை தி.மு.க ஜெயலலிதாவுக்கு கொடுத்திருக்கும் பட்டம்தான் இந்த வாய்தா ராணி....எப்படித்தான் யோசிக்கிறாய்ங்களோ தெரியலை, மதுரையில இருக்கற அ.தி.மு.க காரங்க எல்லாம் என்ன பண்ணீட்டு இருக்காய்ங்கன்னு தெரியல....

அதிலும் ஜெயலலிதாவும், சரிக்கலாவும் நடமாடும் நகைக்கடையாய் எடுத்துக் கொண்ட படங்கள் பத்து பதினைந்து அடி உயர போஸ்டரில் வாய்தா ராணி என்கிற டயலாக்குடன் பார்க்கும் போது நிச்சயமாய் ஒரு எஃபெக்ட் வரத்தான் செய்கிறது. மதுரையில் முக்கியமான இடமெல்லாம் இந்த மாதிரியான போஸ்ட்டர்கள்தான் நீக்கமற நிறைந்திருக்கிறது.

”சென்னைக்கு கள்ள டிக்கெட்டில் ரயிலேறிவந்த கருணாநிதி”ன்னு தரமிரங்கி பேசிய ஜெயலலிதாவுக்கு இப்படித்தான் ஆப்படிக்கனும்னு நம்ம தி.மு.க சகா ஒருத்தர் சொல்றார். நேற்றைக்கு கோவையில் பேசிய கலைஞர் கூட இந்த மரியாதை குறைவை ”வலிக்குது ஆனா வலிக்கலை”ன்ற மாதிரி பேசீயிருக்கார்.

இனி, அதிமுக பக்கம் இருந்து என்ன ரீயாக்‌ஷன் வருதுன்னு பார்ப்போம்....இவுகளால நமக்கு பொழுதாவுது போவுது!

எது எப்படியோ....இந்த வாய்தா ராணி பட்டம் கேட்சியா(Catchy) இருக்குல்ல!

Friday

ஹலோ பாஸ்!, நான் பிரபல பதிவராய்ட்டேன்....

தமிழ் வலை உலகத்துல ஆளாளுக்கு பிரபல பதிவர்..பிரபல பதிவர்னு மெனக்கெட்டு அலட்டிக்கறாங்க.....இதை மெய்ண்ட்டெய்ன் பண்ண ஒரு பெரிய கும்பல் வேற சேர்க்க வேண்டியிருக்கு.... இதெல்லாம் பெரிய கஷ்டமப்பா!

அதுனால டகால்ட்டியா ஒரு யோசனை வர, நமக்கு நாமே திட்டத்தின் கீழ பிரபல பதிவராய்ட்டேன்.இனி எல்லாரும் என்னை பிரபல பதிவர்னுதான் சொல்லியாவனும்.

ங்கொய்யால! இனி எவனாவது நான் பிரபல பதிவர் இல்லைன்னு சொல்லட்டும் வச்சிக்கறேன்.....

இனி வரும் நாட்களில் நானும் பிரபல பதிவர்கள் போட்டுக் குடுத்த ரூட்ல செம்மொலியான தமில் மொலியை வளர்ப்பேன் என உறுதி கூறுகிறேன்.

அல்லாரும் ஜோரா வந்து பின்னூட்டத்துல கும்மீட்டு போங்க மக்கா!

- பிரபல பதிவர்