Saturday

ஆயுத பூசை!






கும்புட்டுக்கங்க! இனியாவது எனக்கு நல்ல புத்தி வரணும்னு!

Sunday

சத்திய(மா) சோதனை பதிவு

கதறக் கதற, பிழியப் பிழிய,துள்ளத் துடிக்க நீள நீளமாய் பதிவுகள் எழுத வேண்டுமென ஆசையெல்லாம் படுகிறேன், மேட்டரெல்லாம் கூட நெறய இருக்கு....ஆனால் நீண்ட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் திருவாளர் சோம்பேறித்தனத்துடன் அருமையான கூட்டணி அமைத்திருப்பதால் அந்த மாதிரியான பதிவுகளை வாசிக்கும் பாக்கியம் உங்களுக்கு கிடைக்காமல் போகிறது.

என்ன சொல்ல, நீங்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்....

அயோத்தி தீர்ப்புல எனக்கு உடன்பாடில்லை,அந்த நாள் குத்து வெட்டு இல்லாமல் அமைதியா போனதில் ரொம்பவே சந்தோஷம்.சகிப்புத் தன்மையில் நாம் வளர்கிறோமா என்ன!.

எந்திரன் ரிலீஸ் செய்த ஒரே பதிவர் என்கிற பெருமையை நான் தட்டிச் சென்று விட்டதாக நாளைய சரித்திரம் கூறும்.எனக்கு அதிலெல்லாம் பெரிதாய் ஆர்வமில்லை, போட்ட காசு வந்தால் போதுமென்ற மனநிலையே மேலோங்கியிருக்கிறது. நிச்சயமாக எந்திரன் விமர்சனம் எழுத மாட்டேன் என்ற உறுதியை இங்கே தந்து விடுகிறேன். பிழைத்துப் போங்கள்...

”The Immortals of Meluha” பற்றி எழுதுவதாக ஏற்கனவே கூறியிருந்தேன். இன்னமும் முடிக்கவில்லை, ஆனால் வாசித்தவரையில் சுவாரசியமாய் இருக்கிறது. மிகப் பெரிய பிம்பமான சிவனை, ஒரு சாமானிய இளைஞனாய் கற்பனை செய்வதும், அவரின் எண்ண் ஓட்டத்தில் கூடவே பயணிப்பதும் சுவாரசியமாய் இருக்கிறது.விரிவாய் எழுதிட வேண்டிய விமர்சனம் அது, இதை ஒரு ட்ரெயிலராக வைத்துக் கொள்ளலாம்...சினிமாக்காரன் புத்தி!

மகாத்மாக்கள் ஒரு நூற்றாண்டுக்கு ஒருத்தர்தான் பிறப்பாஙக்ளாம். அந்த கணக்குல பார்த்தா 1969ல பிற்ந்த மஹாத்மாவை மக்கள் எப்ப தெரிஞ்சுக்குவாங்கன்னு தெரியலையே!...ம்ம்ம்ம், விதி வலியது!