Wednesday

சிங்கம்ம்ம்ம்ம்ம்.....

இந்த ஆள் என்னுடைய ஆதர்சம்...இவரைப் போல எழுதிட வேண்டுமென பல காலமாக நினைத்து கொண்டிருக்கிறேன், எழுதினேனா என்பது வேறு விஷய்ம். எழுபது வருடங்களுக்கு மேலாக பத்திரிக்கை துறையில் தீவிரமாய் இயங்கிவருபவர். இப்போது வயதின் காரணமாய் உடல் தளர்ந்திருந்தாலும் இளமை நிரம்பி வழியும் எழுத்தாளர்.

அவரின் எழுத்துக்களில் திமிறும் இளமையும்,ததும்பும் நகைச்சுவையும் வாசித்தால் மட்டுமே அனுபவிக்க முடியும்....வார்த்தைகளால் இங்கே சொல்லிவிட முடியாது.அரசியல் கட்டுரகளில் இவரால் பந்தாடப் படாத அரசியல்வாதிகள் சொற்பமே...கொஞ்சமும் தன்னை சமரசம் செய்து கொள்ளாத எழுத்தாளன் இவர்.

தொண்ணூற்று ஆறு வயதில் தனது கடைசி நாவல் என்று சொல்லி தற்போது ஒரு புதினத்தை வெளியிட இருக்கிறார்(The Sunset club).சமீபத்தில் அவரின் பேட்டி ஒன்றினை பார்க்க நேர்ந்தது.தேடிப் பிடித்து அதன் இனைப்பை இங்கே தந்திருக்கிறேன்.பார்த்து விட்டு சொல்லுங்கள்...இந்த எழுத்து சிங்கத்தின் வீச்சினை...

இத்தனை சொல்லும் போதே தெரிந்திருக்க வேண்டும்...அவர் யாரென, தெரியாதவர்களுக்கு அவர் திரு.குஷ்வந்த் சிங்.